தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ் திரையுலகில் 80-கள் காலக்கட்டத்தில் டாப் நடிகையாக வலம் வந்தவர் சுகன்யா. 2002ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அவர், கருத்து வேறுபாடு காரணமாக ஒரே வருடத்தில் பிரிந்தார். சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதற்கிடையில் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் தொடரில் நடித்து சின்னத்திரை நேயர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதன்பிறகு பெரிய அளவில் சீரியல்களில் தோன்றாத அவர் தற்போது மீண்டும் சின்னத்திரை சீரியலில் நடிக்க உள்ளார். இதனால் ரசிகர்களிடத்தில் அதிக எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. மிகவிரைவில் சுகன்யா எந்த சேனலில் எந்த தொடரில் நடிக்கிறார் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என சின்னத்திரை வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகி வருகிறது.