ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
2023ம் ஆண்டில் வெளிவந்த படங்களில் ஏப்ரல் மாதம் வெளிவந்த சரித்திரப் படமான 'யாத்திசை' படம் ரசிகர்களின் கவனத்தையும், விமர்சகர்களின் பாராட்டையும் பெற்ற ஒரு படமாக அமைந்தது. சேர, சோழர்களை வென்ற பாண்டிய மன்னனின் கற்பனை வரலாற்றுப் படமாக இப்படத்தை இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கியிருந்தார். புதுமுகங்களை வைத்து அவர் இயக்கிய இப்படம் 'பொன்னியின் செல்வன் 2' படத்திற்கு முன்பாக வெளிவந்து ஆச்சரியப்படுத்தியது.
இயக்குனர் தரணி ராசேந்திரன் தனது அடுத்த படத்தை காஷ்மீர் பின்னணியில் படமாக்க உள்ளார். இது குறித்து, “யாத்திசையை தொடர்ந்து அடுத்த படத்திற்கான வேலையாக இடம் பார்க்க ஒளிப்பதிவாளர் மற்றும் கலை இயக்குநருடன் காஷ்மீர் வந்துள்ளேன். மிக பிரம்மாண்ட கதை களமாக இந்த படம் அமையும். மற்ற விவரங்கள் முதன்மை நடிகர்கள் மற்ற நடிகர்கள் தேர்வு, படப்பிடிப்பு,வெளியீடு குறித்து விரைவில் எழுதுகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.