அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு |
நடிகர் ரஜினி தற்போது 'வேட்டையன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. 'ஜெய்பீம்' படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்குகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலி, தென்காசி பகுதிகளில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு மீண்டும் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தொடங்கி உள்ளது. ஏற்கெனவே அங்கு முகாமிட்டிருக்கும் படக்குழு ரஜினி இல்லாத காட்சிகளை படமாக்கி வந்தனர்.
இந்த நிலையில் தனது போர்ஷனில் நடிப்பதற்காக ரஜினி சென்றுள்ளார். நேற்று சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் சென்றார். ரஜினிகாந்த் வருவதாக தகவல் அறிந்து ரசிகர் மன்ற நிர்வாகிகள் விமான நிலையம் வந்து அவரை உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் படப்பிடிப்புக்கு புறப்பட்டுச் சென்றார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகள் எதையும் அவர் பார்வையிடவில்லை. பெரும் துயரத்தில் இருக்கும் மக்களை பற்றி எந்த கவலையும் இல்லாமல் பாதிக்கப்பட்ட பகுதியிலேயே ரஜினி நடித்துக் கொண்டிருப்பது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.