தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நயன்தாரா சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. சின்னத்திரை தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கிய நயன்தாரா 'மனசினக்கரே' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 'ஐயா' படத்தின் மூலமாக தமிழுக்கு வந்தார். தற்போது 20 ஆண்டுகளில் 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையான நயன்தாரா இந்த ஆண்டு பாலிவுட்டிலும் அறிமுகமாகி உள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.
சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பகத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "நான் 20 ஆண்டுகளை கடந்தும் இங்கே நிற்பதற்கு ரசிகர்களாகிய நீங்கள்தான் காரணம். எனக்கு உந்து சக்தியாகவும், இதய துடிப்பாகவும் இருந்தீர்கள். நீங்கள் இல்லாமல் சினிமா வாழ்க்கை பயணம் முழுமையடையாது. 20 ஆண்டு மைல் கல்லை எட்டுவதற்கு எனது பயணத்தை வடிவமைத்து ஊக்கமளிக்கும் சக்தியாக நீங்கள் இருந்ததை கொண்டாடுகிறேன்.
எனது ஒவ்வொரு திட்டத்தையும் வெற்றியாக மாற்றிய மந்திரம் நீங்கள்தான். இந்த மைல்கல்லை நான் கொண்டாடும் போது, இந்த இரண்டு தசாப்தங்களாக சினிமாவில் உருவான நம்பமுடியாத, ஆதரவான மற்றும் ஊக்கமளிக்கும் சக்தியை நான் கொண்டாடுகிறேன். எப்போதும் உங்கள் அன்பு எனக்கு வேண்டும்” என்று எழுதியிருக்கிறார்.