5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர். விரைவில் அவர் அரசியல் கட்சி தொடங்க உள்ளதால் அவ்வப்போது நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்தது, ஒவ்வொரு தொகுதிகளிலும் நூலகம் போன்றவற்றை அமைத்தார். சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது அவரது மக்கள் இயக்கத்தினர் களத்தில் இறங்கி உதவினர்.
தற்போது தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் பெய்த மழை வெள்ளத்தால் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று(டிச., 30) சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தார். விஜய் பின்னர் நெல்லையில் உள்ள மாதா மாளிகையில் 1500 குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
1500 குடும்பத்தினருக்கும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் புதிய உடைகளை அவர் வழங்கினார். மேலும் மழை வெள்ளத்தால் உயிரிழந்த குடும்பத்தினர் சிலருக்கு நிதி உதவியும் அளித்தார்.