தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
திரையுலகை சேர்ந்தவர்களாலும் ரசிகர்களாலும் பொதுமக்களாலும் கேப்டன் என அன்புடன் அழைக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த் நேற்று முன்தினம் காலமானார். திரையுலகில் பல சாதனைகளையும் புதுமைகளையும் செய்த விஜயகாந்த் தமிழ் படங்களில் மட்டும் நடித்தாரே தவிர, வேறு எந்த மொழி படங்களிலும் அவர் ஒருபோதும் நடித்ததில்லை. இதுவே அவருக்கு ஒரு தனிச்சிறப்பாகவும் அமைந்துவிட்டது. இந்த நிலையில் மலையாள நாளிதழ் ஒன்றில் விஜயகாந்த்திற்கும் திருவனந்தபுரத்திற்கும் மலையாள திரையுலகிற்கும் உள்ள தொடர்பு குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன. கஜேந்திரா படப்பிடிப்புக்காக கேரளா சென்ற போது விஜயகாந்ததே இதை பகிர்ந்து கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. அதன் சாராம்சம் இதுதான்.
விஜயகாந்த் தமிழில் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாக அவர் கேரளாவில் திருவனந்தபுரத்திற்கு அவ்வப்போது தனது நண்பர்களுடன் வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். தனது பால்ய கால நண்பர் சுந்தர்ராஜனின் சகோதரி முத்துலட்சுமியின் வீடு திருவனந்தபுரத்தில் தான் இருந்தது. முத்துலட்சுமியின் கணவர் அந்த பகுதியில் ஒரு நகைக்கடை ஒன்றை நடத்தி வந்தார். மலையாள நடிகர்களான சத்யன் மற்றும் ஜெயன் ஆகியோரின் ஆக்ஷன் காட்சிகளுக்கு தீவிர ரசிகரான விஜயகாந்த் திருவனந்தபுரம் வரும்போது எல்லாம் அங்குள்ள ஸ்ரீகுமார் திரையரங்கில் தனக்கு பிடித்த படங்களை பார்ப்பதை வாடிக்கையாக வைத்திருந்தாராம்.
அப்படி தமிழ் சினிமாவிற்குள் அவர் நுழைவதற்கு முன்பாக மலையாள திரை உலகிலும் வாய்ப்பு தேடினாராம். ஆனால் அவரது கருப்பு நிறம் காரணமாக சினிமாவில் நடிக்க அவருக்கு சரியான வாய்ப்புகள் அங்கே கிடைக்கவில்லை. அப்படி வாய்ப்பு தேடிய நாட்களில் நண்பர் சுந்தர்ராஜனின் சகோதரியின் கணவர் கண்ணன் இறந்த விடவே அவர் நடத்தி வந்த நகைக்கடையை ஏழு லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி சில நாட்கள் நடத்தியும் இருக்கிறார் விஜயகாந்த். பின்னர் ஒரு கட்டத்தில் அது சரி வராமல் போகவே அந்த கடையை விற்று விட்டாராம் விஜயகாந்த்.
அதேபோல ஒவ்வொரு ஓணம் பண்டிகையின் போதும் திருவனந்தபுரத்திற்கு வந்து கொண்டாடுவதையும் வாடிக்கையாக வைத்திருந்தாராம் விஜயகாந்த். இந்த தகவல்கள் எல்லாம் இதுவரை தமிழ் ரசிகர்கள் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. விஜயகாந்தின் மறைவை முன்னிட்டு இந்த தகவல்களை அந்த மலையாள முன்னணி நாளிதழ் வெளியிட்டுள்ளது.