தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

தமிழ் திரையுலகில் மிக இளம் வயதிலேயே கவர்ச்சி நடிகையாக புகழ் பெற்ற யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிக பிரபலமானார். தமிழக இளைஞர்கள் பலரும் யாஷிகாவின் தீவிர ரசிகர்களாக உள்ளனர். இந்நிலையில், அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டியில், ‛‛13 வயதிலேயே தனக்கு பாலியல் சீண்டல் நடந்ததாக கூறியுள்ளார்.
சந்தானம் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான இனிமே இப்படித்தான் படத்தின் ஷூட்டிங்கிற்காக புதுச்சேரி சென்ற போது அங்கே ஒருவன் யாஷிகாவிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறியுள்ளார். மேலும், அப்போதே அதை தைரியமாக கையாண்டு தன்னை சீண்டிய நபரை எட்டி உதைத்ததாகவும் பெண்களுக்கு இதுபோன்ற விஷயங்களில் தைரியம் மிகவும் முக்கியம் என்றும் அந்த பேட்டியில் யாஷிகா ஆனந்த் கூறியுள்ளார்.