திரையுலகில் 50 ஆண்டுகள் : ரஜினிகாந்த்துக்கு இபிஎஸ், உதயநிதி, பிரேமலதா வாழ்த்து | 'எக்ஸ்க்ளுசிவ் ஒப்பந்தம்' : 'வார் 2' செய்வது சரியா ? | கூலி படத்தில் ரஜினிக்கு ஜோடி கிடையாதா? | இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் |
மறைந்த இயக்குனர் ராசு.மதுரவன் இயக்கி இருந்த படம் 'மாயாண்டி குடும்பத்தார்' கடந்த 2009ம் ஆண்டு வெளியான இந்த படத்தை யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. சீமான், தருண் கோபி, சிங்கம் புலி, மயில்சாமி, மணிவண்ணன், பொன்வண்ணன், ரவிமரியா, பூங்கொடி, புனிதா, கனிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பாலபரணி ஒளிப்பதிவு செய்திருந்தார், சபேஷ் முரளி இசை அமைத்திருந்தனர்.
அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான குடும்ப சண்டையும், பங்காளி பகையும் ஒரு கட்டத்தில் அன்பால் இணைவது மாதிரியான கதை. சிறந்த படத்திற்கான தமிழக அரசின் விருதில் இரண்டாம் பரிசையும் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல் பாகத்தை தயாரித்த யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் 2ம் பாகத்தையும் தயாரிக்க உள்ளதாகவும், கதை, திரைக்கதை வசனம் எழுதி கே.பி.ஜெகன் படத்தை இயக்க உள்ளதாகவும், முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள், இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
முதல் பாகத்தில் நடித்தவர்களில் மணிவண்ணன் தற்போது உயிருடன் இல்லை. அவர்தான் குடும்பத்தின் தலைவர் மாயாண்டியாக நடித்திருந்தார். தற்போது அவருக்கு பதிலாக அந்த கேரக்டரில் ராஜ்கிரணை நடிக்க வைக்க படக்குழுவினர் முயற்சி செய்து வருகிறார்கள்.