தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் |
வடசென்னை பகுதியில் எப்போதும் புறா பந்தயங்கள் நடந்து வருகின்றன. இதன் பின்னணியில் ஏற்கனவே பல படங்கள் தயாராகி இருக்கிறது. குறிப்பாக தனுஷ் நடித்த 'மாரி' படத்தில் புறா பந்தய பின்னணி கதைக்களமாக இருந்தது.
தற்போது முழுநீள புறா பந்தயத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம், 'பைரி'. டி.கே புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.துரைராஜ் தயாரித்துள்ளார். சையது மஜீத், மேக்னா எலன், விஜி சேகர், ஜான் கிளாடி நடித்துள்ளனர். ஏ.வி.வசந்தகுமார் ஒளிப்பதிவு செய்ய, அருண் ராஜ் இசை அமைத்துள்ளார்.
ஜான் கிளாடி எழுதி இயக்கியுள்ளார். படம் குறித்து அவர் கூறும் போது "பைரி என்பது 'பால்கன்' என்ற பருந்தின் பெயர். இக்கதைக்கு அப்பெயர் பொருத்தமாக இருந்ததால் அதை தேர்வு செய்தோம். ஒருவர் 30 புறாக்கள் வளர்த்தால், பந்தயத்துக்கு 3 புறாக்கள் மட்டுமே தேறும். வளர்க்கப்படும் புறாக்களை பைரி தூக்கிக்கொண்டு சென்றுவிடும். அதுபோல், மனிதர்களின் வாழ்க்கையிலும் உயரத்தில் இருப்பவர்களைக் கடந்து சிலபேர் மட்டுமே சாதிக்க முடிகிறது. இதை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. புறா பந்தயம் பற்றி மட்டுமின்றி, ஒரு தாய், மகனுக்கு இடையிலுள்ள பாசத்தைப் பற்றியும் படம் பேசுகிறது. வரும் பிப்ரவரி மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்"என்றார்.