ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கருணாநியை அவரது வீட்டிலேயேசென்று சந்தித்தவர் சாய்பாபா என நடிகர் ரஜினி காந்த் கூறினார்.
சென்னை கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: கருணாநிதியின் மந்திரகுமாரி படத்தில் கிடைத்த வருமானம் மூலம் தான் 1955-ல் கோபாலபுரம் வீடு வாங்கப்பட்டது. தன்னுடைய கடைசிகாலம் வரையில் வீட்டில் எந்த மாற்றமும் செய்யாமல் பழமையை போற்றி வாழ்ந்தார்.
சாய்பாபாவை சந்திக்க ஜனாதிபதியே காத்திருக்க வேண்டும்.ஆனால் சாய்பாபாவே கருணாநியை அவரது வீட்டிலேயே சென்று சந்தித்தார். கருணாநிதியிடம் எழுத்தாற்றல் மட்டுமல்லாதது பேச்சாற்றலும் இருந்தது. கருணாநிதியின் பேச்சில் தெனாலிராமனின் நையாண்டியும் சாணக்கியனின் தந்திரமும் இருந்தது. பாரதியின் கோபம் இருக்கும்.
கருணாநிதியின் காலத்தில் வாழ்ந்தோம் என்பதே மிகப்பெரிய விசயம். எழுத்தாளர் ஜெயகாந்தனின் மருத்துவ செலவை ஏற்றவர் கருணாநிதி கருணாநிதியின் எழுத்துக்களை படித்தால் கண்களில்தண்ணீர் வரும், சில எழுத்துக்களை படித்தால் கண்ணில் இருந்து நெருப்பு வரும். உஙகளுக்கு ஆண்டவனை பிடிக்காது ஆனால் ஆண்டவனுக்கு உங்களை பிடிக்கும் என நான் கருணாநிதியிடம் சொன்னேன். கருணாநிதி அரசியல் பக்கம் போகாமல் இருந்திருந்தால் இன்னும் பல சிவாஜி எம்.ஜி.ஆர்களை உருவாக்கி இருப்பார்.
மக்கள் சேவையுடன் தந்தையின் பெயரையும் முதல்வர் ஸ்டாலின் காப்பாற்ற வேண்டும். காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. என ரஜினி கூறினார்.