தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கருணாநியை அவரது வீட்டிலேயேசென்று சந்தித்தவர் சாய்பாபா என நடிகர் ரஜினி காந்த் கூறினார்.
சென்னை கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: கருணாநிதியின் மந்திரகுமாரி படத்தில் கிடைத்த வருமானம் மூலம் தான் 1955-ல் கோபாலபுரம் வீடு வாங்கப்பட்டது. தன்னுடைய கடைசிகாலம் வரையில் வீட்டில் எந்த மாற்றமும் செய்யாமல் பழமையை போற்றி வாழ்ந்தார்.
சாய்பாபாவை சந்திக்க ஜனாதிபதியே காத்திருக்க வேண்டும்.ஆனால் சாய்பாபாவே கருணாநியை அவரது வீட்டிலேயே சென்று சந்தித்தார். கருணாநிதியிடம் எழுத்தாற்றல் மட்டுமல்லாதது பேச்சாற்றலும் இருந்தது. கருணாநிதியின் பேச்சில் தெனாலிராமனின் நையாண்டியும் சாணக்கியனின் தந்திரமும் இருந்தது. பாரதியின் கோபம் இருக்கும்.
கருணாநிதியின் காலத்தில் வாழ்ந்தோம் என்பதே மிகப்பெரிய விசயம். எழுத்தாளர் ஜெயகாந்தனின் மருத்துவ செலவை ஏற்றவர் கருணாநிதி கருணாநிதியின் எழுத்துக்களை படித்தால் கண்களில்தண்ணீர் வரும், சில எழுத்துக்களை படித்தால் கண்ணில் இருந்து நெருப்பு வரும். உஙகளுக்கு ஆண்டவனை பிடிக்காது ஆனால் ஆண்டவனுக்கு உங்களை பிடிக்கும் என நான் கருணாநிதியிடம் சொன்னேன். கருணாநிதி அரசியல் பக்கம் போகாமல் இருந்திருந்தால் இன்னும் பல சிவாஜி எம்.ஜி.ஆர்களை உருவாக்கி இருப்பார்.
மக்கள் சேவையுடன் தந்தையின் பெயரையும் முதல்வர் ஸ்டாலின் காப்பாற்ற வேண்டும். காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. என ரஜினி கூறினார்.