தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ஜெயிலர் படத்தை அடுத்து ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் தற்போது நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இப்படத்தில் அவருடன் அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சுவாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171 வது படத்தில் நடிக்கப் போகிறார் ரஜினி.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தை அடுத்து மாரி செல்வராஜ், நெல்சன் ஆகியோர் இயக்கும் படங்களில் அடுத்தடுத்து ரஜினி நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது. மாமன்னன் படத்திற்கு பிறகு ரஜினியை சந்தித்து மாரி செல்வராஜ் ஒரு கதை சொல்லியிருப்பதாக கூறப்படும் அதேவேளையில், ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை ரஜினியை சந்தித்து நெல்சன் கூறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. என்றாலும் இது குறித்து ரஜினி தரப்பில் இருந்தோ, சம்பந்தப்பட்ட இயக்குனர்கள் தரப்பிலிருந்தோ எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.