இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் பொங்கல் ரிலீஸாக திரைக்கு வந்துள்ளது. அடுத்து தனது 50வது படத்தை இயக்கி, நடித்து முடித்துள்ளார். தற்போது ‛நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் தனது 51வது படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் நாகார்ஜூனா நடிக்கின்றார். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகிறது.
இந்த நிலையில் இதன் படப்பிடிப்பு பூஜையுடன் ஐதராபாத்தில் தொடங்கியதாக இன்று(ஜன., 18) படக்குழு அறிவித்துள்ளனர். இதற்காக தனுஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பே ஐதராபாத்திற்கு சென்றார்.