இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
'கேஜிஎப்' படங்களின் மூலம் இந்தியத் திரையுலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் கன்னட இயக்குனர் பிரசாந்த நீல். அவரும் பிரபாஸும் இணைந்த பான் இந்தியா படமான 'சலார்' படம் கடந்த டிசம்பர் மாதம் 22ம் தேதி வெளியானது.
அதிக எதிர்பார்ப்புடன் வந்த இப்படம் தெலுங்கு ரசிகர்களை மட்டுமே கவர்ந்தது. மற்ற மொழிகளில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை, சாதனை வசூலும் கிடைக்கவில்லை. 1000 கோடி வசூலைக் கடக்கும் என சிலர் சொன்னதற்கு மாறாக 600 கோடி வசூலை மட்டுமே கடந்ததாகத் தெரிகிறது. விமர்சன ரீதியாக பலத்த விமர்சனங்களைப் படம் பெற்றது. 'கேஜிஎப்' சாயல்தான் படத்தில் அதிகமாக இருந்ததாகப் பலரும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் படம் வெளியாகி நான்கு வாரங்கள் ஆகிவிட்டதால், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி உள்ளது. ஹிந்தியில் 8 வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடியில் வெளியிட முடியும், அதனால், ஹிந்தியில் வெளியாகவில்லை.
ஓடிடி தளத்தில் இப்படத்திற்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கப் போகிறது என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.