ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரவிக்குமார், சிவகார்த்திகேயன் இணைந்த 'அயலான்' படம் பொங்கலுக்கு வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் இப்படம் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்த வாரம் தெலுங்கில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கப் போவதாக படத்தில் விஎப்எக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைத்த பான்டம் எப்எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜனவரி 18, 2024ம் தேதியன்று இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 'அயலான் 2' படத்தின் விஎப்எக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மட்டும் தனியாக முதல்கட்டமாக 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பு சிறப்பாக அமையும் போது அந்தத் தொகை இன்னும் அதிகமாக்கப்படுமாம்.
'அயலான்' படத்தின் வெற்றியின் காரணமாக நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் ரவிக்குமார், தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் மீண்டும் இணைய முடிவெடுத்துள்ளனராம். 'அயலான்' படத்தில் இடம் பெற்ற ஏலியன் 'டாட்டூ' பார்வையாளர்கள் மத்தியில் அழியாத முத்திரையைப் பதித்துள்ளது. இரண்டாம் பாகத்தில் மிகச் சிறப்பான காட்சிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர்களது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்கள்.
ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாரா, படத்தின் மற்ற நடிகர்கள், நடிகைகள் போன்ற விவரங்கள் 'அயலான் 2' படத்தின் துவக்க விழாவின் போது தெரிய வரும்.