இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கேப்டன் மில்லர், மற்றும் மிஷன் சேப்டர் 1 படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்கு தேசிய விருது கிடைக்கும் என்ற கருத்துகளால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ஸ்டன்ட் சில்வா. தமிழ், தெலுங்கு, மலயாளம், கன்னடம், ஹிந்தி, மராட்டி, பெங்காலி மற்றும் சிங்களம் என பல மொழிகளிலும் 300 படங்களுக்கு மேலாக சண்டை பயிற்சியாளராக பணியாற்றி பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
அஜித் நடிப்பில் வெளிவந்த 'மங்காத்தா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். அதன் பிறகு 'என்னை அறிந்தால்' படத்திற்கு சண்டை அமைத்தார். சில படங்களில் வில்லனாகவும் நடித்தார். 2022ம் ஆண்டு 'சித்திரை செவ்வானம்' என்ற படத்தை இயக்கினார். சமுத்திரக்கனி, சாய் பல்லவியின் தங்கை பூஜா நடித்திருந்தார்கள். சண்டை இயக்குனர் இயக்கிய படம் என்றாலும் சமூகத்தில் பெண் பிள்ளைகளை எவ்வாறு பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்ற கருத்தை சொன்ன படம்.
இந்த நிலையில் தான் அடுத்து இயக்கப்போகும் படம் பற்றி விரைவில் அறிவிக்க இருக்கிறார். இது ஹாலிவுட் பாணியிலான அதிரடி ஆக்ஷன் படமாக இருக்கும் என்கிறார் சில்வா. விஜய், அஜித் இருவரிடமும் கதையை சொல்லிவிட்டு ஒப்புதலுக்காக காத்திருக்கிறார். ஒரு வேளை இருவரும் ஒத்துக் கொள்ளவில்லை என்றால், அந்த கதையை அருண் விஜய்யை வைத்து இயக்குவார் என்று தெரிகிறது.