அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? | ரசிகர்களுடன் போட்டோ, விருந்து : தனுஷ் மாறியது ஏன் | மாளவிகா மோகனனின் பிறந்தநாளுக்கு போஸ்டர் வெளியிட்டு அசத்திய மும்மொழி பட குழுவினர் | 50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா | தனி நபர்களை வைத்து படப்பிடிப்பு : தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை |
ஸ்லம் டாக் மில்லியனர் படத்திற்காக சிறந்த சவுண்டு இன்ஜினியர் பிரிவில் ஆஸ்கர் விருது வாங்கியவர் கேரளாவை சேர்ந்த ரசூல் பூக்குட்டி. அதை தொடர்ந்து தென்னிந்தியா மட்டும் அல்லாது பாலிவுட்டிலும் மிகப்பெரிய படங்களில் பணியாற்றி வருகிறார். அந்த வகையில் பிரித்திவிராஜ் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள விரைவில் வெளியாக இருக்கும் ஆடுஜீவிதம் என்கிற படத்திலும் இவர் சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இயக்குனர் பிளஸ்சி இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் இருந்து ஏ.ஆர் ரஹ்மானின் பின்னணி இசை குறித்து கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள ரசூல் பூக்குட்டி, ஏ.ஆர் ரஹ்மானை மேஸ்ட்ரோ என்றும் குறிப்பிட்டுள்ளார். இசை மேதைகளை மேஸ்ட்ரோ என்று குறிப்பிடுவது சரிதான் என்றாலும் ரசிகர்களை பொருத்தவரை, ஏன் இந்திய அளவில் மேஸ்ட்ரோ என்றால் அது இளையராஜா ஒருவரை மட்டுமே குறிக்கும். இந்த விஷயம் தெரிந்தும் ரசூல் கூட்டி இவ்வாறு குறிப்பிட்டது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இசை ரசிகர்கள் பலரும் கலவையாக விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.