படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது விஜய் நடிப்பில் ‛தி கோட்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். சம்மரில் வெளியாகும் விதமாக இந்த படத்தின் படப்பிடிப்பு சீரான வேகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் பலரும் மறந்து விட்ட விஷயம் என்னவென்றால் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வெங்கட் பிரபு கன்னட முன்னணி நடிகரான சுதீப்பை வைத்து படம் இயக்கப் போகிறார் என்று ஒரு தகவல் வெளியானது. அந்த சமயத்தில் பெங்களூரு வந்த வெங்கட் பிரபுவை தனது வீட்டிற்கு அழைத்து விருந்தோம்பல் செய்தார் சுதீப். அதை தொடர்ந்து உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக இருக்கிறேன் என்று வெங்கட் பிரபுவும் கூறி இருந்தார்.
அப்போது மாநாடு படம் கிட்டத்தட்ட முடிவடைந்து இருந்த நிலையில் அதன் பிறகு அவர் சுதீப் படத்தை இயக்குவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிப்பில் கஸ்டடி படத்தை இயக்குவதாக அறிவித்தார் வெங்கட் பிரபு. அதை முடித்துவிட்டு இதோ இப்போது விஜய் படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது சுதீப் படத்தை வெங்கட் பிரபு இயக்குவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் கிட்டத்தட்ட அந்த படம் வெறும் செய்தி அளவிலேயே கைவிடப்பட்டதாகவும் கன்னட திரையுலகில் இருந்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அது உண்மை என்பது போன்று சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் கிச்சா சுதீப் கலந்துரையாடினார். அப்போது, ஒரு ரசிகர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நீங்கள் நடிக்க இருந்த படம் என்ன ஆனது? என்று ஒரு கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர், வெங்கட் பிரபுவை காணவில்லை என்று பதில் கொடுத்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் சுதீப் கொடுத்த இந்த பதில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.