கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வருபவர் ராஜ்கிரண். இவரது வளர்ப்பு மகள் பிரியா என்கிற ஜீனத்பிரியா. சின்னத்திரை மற்றும் சினிமா நடிகரான முனீஸ்ராஜாவை காதலித்து வந்த பிரியா கடந்த 2022ல் அவரை திருமணம் செய்து கொண்டார்.
ராஜ்கிரண் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேட்காமல் அவரது எதிர்ப்பை மீறி திருமணம் செய்தார் பிரியா. இதுதொடர்பாக பிரியா - முனீஸ்ராஜா தம்பதியர் மற்றும் ராஜ்கிரண் இடையே மாறி மாறி சண்டை, சர்ச்சைகள் எழுந்தன. போலீஸில் புகார்கள் எல்லாம் பதிவாகின. 'பிரியா என் மகளே அல்ல' என ராஜ்கிரண் கூறினார். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளில் பிரியா - முனீஸ்ராஜா பிரிந்துவிட்டனர்.

இதுதொடர்பாக பிரியா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‛‛2022ல் நானும், முனீஸ்ராஜாவும் திருமணம் செய்தோம். இப்போது நாங்கள் பிரிந்து சில மாதங்கள் ஆகிவிட்டன. எங்கள் திருமணம் சட்டபூர்வமானது இல்லை. என்னை வளர்த்த அப்பாவை(ராஜ்கிரண்) ரொம்ப காயப்படுத்தி விட்டேன். ஆனால் எனக்கு பிரச்னை வந்தபோது என்னை காப்பாற்றியது அவர் தான். இது நான் எதிர்பார்க்காத கருணை. எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் பத்தாது. என்னை மன்னித்து விடுங்கள் அப்பா'' என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.