வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் |

கன்னட சினிமாவில் அறிமுகமானவர் ராகினி திவேதி. இடையிடையே மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்தார். 2014ம் ஆண்டு சமுத்திரகனி இயக்கிய 'நிமிர்ந்து நில்' படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்தார். அதுதான் அவர் முதலும், கடைசியுமாக நடித்த தமிழ் படம்.
அதன் பிறகு கன்னட சினிமாவில் பிசியாக நடித்தவர் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சில காலம் சிறையில் இருந்தார். இப்போது ஜாமீனில் விடுதலையாகி உள்ள அவர் மீண்டும் நடிக்கத் தொடங்கிருக்கிறார்.
10 வருடங்களுக்கு பிறகு அவர் நடிப்பில் உருவான 'இமெயில்' என்ற படம் வருகிற 9ம் தேதி வெளியாகிறது. எஸ்.ஆர் பிலிம் பேக்ட்ரி சார்பில் எஸ்.ஆர்.ராஜன் தயாரித்து, இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகனாக 'முருகா' அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார். இவர்கள் தவிர மனோபாலா, லொள்ளு சபா மனோகர், வனிதாஸ்ரீ , அக்ஷய் ராஜ், ஆரஞ்சு மிட்டாய் பிரபா உள்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், கன்னடம் என இருமொழிகளிலும் வெளியாகிறது.