இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கன்னட நடிகர் சிவராஜ் குமார் கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர், கேப்டன் மில்லர் ஆகிய படங்களின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமாகி உள்ளார். தற்போது சப்த சாகரதாச்சே எல்லோ சைட் ஏ, பி படங்களின் வெற்றி இயக்குநர் ஹேமந்த் ராவ் உடன் இணைந்து புதிய படத்தில் சிவராஜ் குமார் நடிக்கவுள்ளார். இப்படம் பெரிய பொருட்செலவில் உருவாகும் வரலாற்று படம் என கூறப்படுகிறது.
இயக்குநர் ஹேமந்த் ராவ் கூறியதாவது, ‛‛ஒரு நடிகராக சிவராஜ்குமாரின் அனுபவம் மிகப்பெரியது. அவர் தனது முழு வாழ்க்கையிலும் மாறுபட்ட பல பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். ஒரு இயக்குநராக என்னையும், அவரையும் உற்சாகப்படுத்தும் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். அவருடன் பணியாற்றுவது எனக்கு கிடைத்திருக்கும் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு'' என்றார்.
விரைவில் மற்ற அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாக உள்ளன.