தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கன்னட நடிகர் சிவராஜ் குமார் கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர், கேப்டன் மில்லர் ஆகிய படங்களின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமாகி உள்ளார். தற்போது சப்த சாகரதாச்சே எல்லோ சைட் ஏ, பி படங்களின் வெற்றி இயக்குநர் ஹேமந்த் ராவ் உடன் இணைந்து புதிய படத்தில் சிவராஜ் குமார் நடிக்கவுள்ளார். இப்படம் பெரிய பொருட்செலவில் உருவாகும் வரலாற்று படம் என கூறப்படுகிறது.
இயக்குநர் ஹேமந்த் ராவ் கூறியதாவது, ‛‛ஒரு நடிகராக சிவராஜ்குமாரின் அனுபவம் மிகப்பெரியது. அவர் தனது முழு வாழ்க்கையிலும் மாறுபட்ட பல பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். ஒரு இயக்குநராக என்னையும், அவரையும் உற்சாகப்படுத்தும் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். அவருடன் பணியாற்றுவது எனக்கு கிடைத்திருக்கும் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு'' என்றார்.
விரைவில் மற்ற அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாக உள்ளன.