முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! | கூலி படத்தை பார்த்துவிட்டு உதயநிதி, லதா ரஜினி வெளியிட்ட தகவல்! | பருத்திவீரன் சரவணன் நடிக்கும் போலீஸ் பேமிலி | ‛பாகுபலி' நாயகன் பிரபாஸுக்கு விரைவில் திருமணம்! | 'கூலி' படத்தின் வியாபாரம் : கோலிவுட் வட்டாரத் தகவல் | இன்று 92வது பிறந்தநாள் கொண்டாடுகிறார் பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா | கூலி முதல் ஷோ எங்கே தொடங்குகிறது? இதுவரை 11 லட்சம் டிக்கெட் விற்பனை |
தமிழில் களவாணி, முத்துக்கு முத்தாக, மெரினா, மதயானை கூட்டம் உள்பட பல படங்களில் நடித்தவர் ஓவியா. பிக்பாஸ் சீசன்-1 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார். தற்போது 32 வயதாகும் ஓவியா திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், சிங்கிளாக வாழ்வதிலேயே நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னுடைய மகிழ்ச்சிக்கு இன்னொரு துணை இல்லை என்பது எனது எண்ணம்.
திருமணம் என்பது அதற்கான நேரம் வரும்போது தான் அமையும். அதுவாக வந்தால் ஓகே. இல்லை என்றாலும் பரவாயில்லை. நான் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பேன். யாரிடத்திலும் எதையும் எதிர்பார்க்கவில்லை. சிங்கிளாக வாழ்வதையே நான் மிகவும் விரும்புகிறேன் என்று அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் ஓவியா.