கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

சமீபத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் ஆகியோர் நடிப்பில் புளூ ஸ்டார் திரைப்படம் வெளியானது. உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கு இடையேயான போட்டியை மையமாக வைத்து வெளியான இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜெயக்குமார் இயக்கியிருந்தார். படமும் ஓரளவுக்கு வரவேற்பையும், வெற்றியையும் பெற்றுள்ளது. ஆனால் இந்த படத்திற்காக முதலில் கதாநாயகனாக ஜெயக்குமார் அணுகியது நடிகர் கவினைத்தான். ஆனால் கவின் அப்போது வேறு சில படங்களுக்கு தேதியை ஒதுக்கி இருந்ததால் இந்த படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை.
அதன்பிறகு தான் இந்த படம் அசோக் செல்வனிடம் சென்றது. அந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி பாண்டியன் ஒப்பந்தமாகி இருந்தார். ஏற்கனவே கீர்த்தி பாண்டியனுடன் நெருங்கிய நட்பில் இருந்த அசோக் செல்வன் உடனடியாக இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதுடன் இந்த படத்தின் படப்பிடிப்பில் தான் தனது காதலையும் கீர்த்தி பாண்டியனிடம் தெரிவித்தார். இந்த படம் வெளி வருவதற்குள் அவர்கள் காதலும் திருமணத்தில் கை கூடியது.