இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
சமீபகாலமாக புராண இதிகாச படங்களை மையப்படுத்தி முன்னணி ஹீரோக்களின் நடிப்பில் ஆதிபுருஷ், ஹனுமான் போன்ற படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் ராமாயண கதையை தழுவி ராமாயண் என்கிற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகிறது. பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்குகிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக சீதா கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் என்றும் சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்தப்படத்தின் பணிகள் துவங்க தாமதமாகி வருவதால் வேறு படங்களுக்கு கால்சீட் கொடுப்பதில் பிரச்னை ஏற்படுவதாக கூறி நடிகை சாய்பல்லவி இந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும் படக்குழுவினர் சாய்பல்லவி தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறார்களாம்.