சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் |
தனுஷ் இயக்குனராக தனது மூன்றாவது படத்தை இயக்கி வருகிறார். இதற்கு 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என தலைப்பு வைத்துள்ளனர். இதில் கதாநாயகனாக அவரது அக்கா மகன் பவிஷ் நடிக்கின்றார். அனைகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர் . ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை வுன்டர்பார் பிலிம்ஸ், ஆர்.கே.புரொடக்சன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு பல கட்டமாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று பிப்.14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு ஸ்பெஷல் புதிய போஸ்டர் ஒன்றை தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கடற்கரை மணலில் நிலவின் பின்னணியில் பவிஷ், அனைகா இருவரும் அமர்ந்து இருப்பது போன்று அந்த போஸ்டர் உள்ளது.