மாளவிகா மோகனனின் பிறந்தநாளுக்கு போஸ்டர் வெளியிட்டு அசத்திய மும்மொழி பட குழுவினர் | 50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா | தனி நபர்களை வைத்து படப்பிடிப்பு : தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை | வாழ்த்து சொன்ன மோகன்லால் ; சந்திக்க நேரம் கேட்ட ஷாருக்கான் | பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர் மகன் ஷானவாஸ் காலமானார் | தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி |
பெங்களூரை சேர்ந்த மனிஷா யாதவ் 'வழக்கு எண்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லன்னா நயன்தார, 'சென்னை 28 இரண்டாம் பாகம், ஒரு குப்பை கதை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சரியான வாய்ப்புகள் இன்றி பெங்களூரு திரும்பிய மனிஷா சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'நினைவெல்லாம் நீயடா' என்ற படம் வருகிற 23ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் பிரஜன், சினாமிகா, யுவலட்சுமி, மதுமிதா, ஆர்.வி.உதயகுமார், தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிலந்தி, ரணதந்திரா, அருவா சண்ட படங்களை இயக்கிய ஆதிராஜன் இயக்கி உள்ளார். ராயல் பாபு தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் மனிஷா, தனக்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாக 'நினைவெல்லாம் நீயடா' படத்தின் தயாரிப்பாளர் மீது புகார் தெரிவித்து உள்ளார். நடிகர் சங்கத்தில் அவர் அளித்துள்ள புகார் மனுவில், ''நான் நினைவெல்லாம் நீயடா படத்தில் நடித்து இருக்கிறேன். அந்த படத்துக்கு பேசிய சம்பளத்தில் 3 லட்சம் தராமல் பாக்கி வைத்துள்ளனர். எனவே படம் வெளியாகும் சூழலில் அதனை வசூலித்து தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த புகார் மனுவை தயாரிப்பாளர் சங்கத்துக்கு, நடிகர் சங்கம் அனுப்பி வைத்துள்ளது.