2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

கன்னட நடிகையான ராஷ்மிகா தெலுங்கில் புஷ்பா படத்தில் நடித்தன் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். பாலிவுட்டில் அறிமுகமான இவரின் குட்பை படம் பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் சமீபத்தில் வெளியான அனிமல் படம் அவரை உயரத்தில் தூக்கி வைத்துள்ளது. ரூ.2 கோடி சம்பளம் பெற்று வந்த ராஷ்மிகா இப்போது தனது சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் போர்ப்ஸ் பட்டியலில் இவர் இடம் பிடித்துள்ளார். சர்வதேச மீடியா நிறுவனமான போர்ப்ஸ் இதழ் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், இந்தாண்டிற்கான 30 வயதுக்குட்பட்ட 30 பிரபலங்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் பொழுதுபோக்கு பிரிவில் நடிகை ராஷ்மிகா மந்தனா இடம் பிடித்துள்ளார். மேலும் இசைத்துறையில் அதிதி சைகல் என்ற பா டகி இடம் பெற்றுள்ளார்.
ராஷ்மிகா தற்போது தனுஷின் 51வது படம், புஷ்பா 2ம் பாகம், ரெயின்போ படங்களில் நடித்து வருகிறார். அனிமல் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார்.