தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கன்னட நடிகையான ராஷ்மிகா தெலுங்கில் புஷ்பா படத்தில் நடித்தன் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். பாலிவுட்டில் அறிமுகமான இவரின் குட்பை படம் பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் சமீபத்தில் வெளியான அனிமல் படம் அவரை உயரத்தில் தூக்கி வைத்துள்ளது. ரூ.2 கோடி சம்பளம் பெற்று வந்த ராஷ்மிகா இப்போது தனது சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் போர்ப்ஸ் பட்டியலில் இவர் இடம் பிடித்துள்ளார். சர்வதேச மீடியா நிறுவனமான போர்ப்ஸ் இதழ் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், இந்தாண்டிற்கான 30 வயதுக்குட்பட்ட 30 பிரபலங்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் பொழுதுபோக்கு பிரிவில் நடிகை ராஷ்மிகா மந்தனா இடம் பிடித்துள்ளார். மேலும் இசைத்துறையில் அதிதி சைகல் என்ற பா டகி இடம் பெற்றுள்ளார்.
ராஷ்மிகா தற்போது தனுஷின் 51வது படம், புஷ்பா 2ம் பாகம், ரெயின்போ படங்களில் நடித்து வருகிறார். அனிமல் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார்.