ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்திற்கு சென்னையில் நேற்று தேர்தல் நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு இசையமைப்பாளர் தினா மற்றும் சபேசன் ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் அதிகாரி பாலசுப்ரமணியன் முன்னிலையில் நடந்த இத்தேர்தலில் எம்.சி சபேசன் 318 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தினா 248 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.
மேலும் செயலாளராக முரளி, பொருளாளராக சந்திரசேகர், துணை தலைவராக மூர்த்தி மற்றும் இணை செயலாளராக பத்மஸ்ரீ பாலேஷ் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
ஏற்கனவே இரண்டு முறை தலைவராக இருந்த தினா மூன்றாவது முறையாகவும் போட்டியிட்டார். இவர் மீது முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் இசையமைப்பாளர் இளையராஜாவே நேரடியாக தினாவை போட்டியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டார். ஆனால் இதுபற்றிய விளக்கத்தை இளையராஜாவிடம் தெரிவித்துவிட்டேன் என்றார் தினா. தினாவிற்கு கங்கை அமரன், மனோ உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்துள்ளார்.