பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா |
தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்திற்கு சென்னையில் நேற்று தேர்தல் நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு இசையமைப்பாளர் தினா மற்றும் சபேசன் ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் அதிகாரி பாலசுப்ரமணியன் முன்னிலையில் நடந்த இத்தேர்தலில் எம்.சி சபேசன் 318 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தினா 248 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.
மேலும் செயலாளராக முரளி, பொருளாளராக சந்திரசேகர், துணை தலைவராக மூர்த்தி மற்றும் இணை செயலாளராக பத்மஸ்ரீ பாலேஷ் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
ஏற்கனவே இரண்டு முறை தலைவராக இருந்த தினா மூன்றாவது முறையாகவும் போட்டியிட்டார். இவர் மீது முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் இசையமைப்பாளர் இளையராஜாவே நேரடியாக தினாவை போட்டியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டார். ஆனால் இதுபற்றிய விளக்கத்தை இளையராஜாவிடம் தெரிவித்துவிட்டேன் என்றார் தினா. தினாவிற்கு கங்கை அமரன், மனோ உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்துள்ளார்.