இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஒருகாலத்தில் தென்னிந்திய சினிமாவின் தலைநகராக சென்னை இருந்தது. தமிழ் படங்கள் மட்டுமின்றி பிறமொழி படங்களும் இங்கு தான் அதிகளவில் நடந்து வந்தன. அதற்கு ஏற்றார்போல் நிறைய சினிமா ஸ்டுடியோக்களும் இங்கு இருந்தன. பின்னர் காலப்போக்கில் அந்த மாநிலங்களுக்கு சினிமாக்கள் இடம் பெயர்ந்தன. மேலும் சென்னையில் இருந்த சினிமா ஸ்டுடியோக்கள் பலவும் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மால்களாக மாறின. தற்போது ஓரிரு சினிமா ஸ்டுடியோக்கள் மட்டுமே இங்கு உள்ளன. தமிழ் சினிமாவின் முக்கிய படப்பிடிப்புகள் தற்போது வெளிமாநிலங்களில் தான் நடக்கின்றன.
இந்நிலையில் தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் தங்கம் தென்னரசு இதை தாக்கல் செய்தார். அதில் சினிமா துறையினருக்கு ஜாக்பாட்டாக தமிழ்த் திரைத் துறையினரின் நீண்டநாள் கோரிக்கையான திரைப்பட நகரம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னையை அடுத்த பூந்தமல்லியில் அதிநவீன திரைப்பட நகரம் அமைக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நவீன திரைப்பட நகரத்தில் விஎப்எக்ஸ், அனிமேஷன், புரொடக்ஷன் பணிகள் பிரிவு உள்ளிட்ட சகல வசதிகளும் இடம் பெற போகின்றன.
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.