இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் சினிமா உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சுந்தர் சி. அவர் இயக்கிய 'கலகலப்பு' படத்தின் முதல் பாகம் 2012ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்றது. அப்படத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம், இளவரசு மற்றும் பலர் நடித்திருந்தனர். அதற்கடுத்து 'கலகலப்பு 2' படம் 2018ம் ஆண்டு வெளிவந்தது. அப்படத்தில் ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ரானி, கேத்தரின் தெரேசா மற்றும் பலர் நடித்திருந்தனர். அப்படமும் வியாபார ரீதியாக வெற்றி பெற்றது.
இயக்குனர் சுந்தர் சி தற்போது 'அரண்மனை 4' படத்தை இயக்கி முடித்துள்ளார். பொங்கலுக்கே அப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்போது வெளியாகவில்லை. அடுத்த வெளியீட்டுத் தேதியையும் அறிவிக்கவில்லை. இப்படத்திற்குப் பிறகு சுந்தர் சி 'கலகலப்பு' படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கப் போவதாகவும், அப்படத்தில் கவின் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்றும் செய்திகள் வெளியாகின.
ஆனால், சுந்தர் சியின் பிஆர்ஓ அந்த செய்தி தவறான ஒன்று என்று மறுத்துள்ளார். அதிகாரப்பூர்வ செய்திகளை மட்டுமே வெளியிடுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.