ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த வருடம் வெளியாகி 600 கோடி வசூலைக் குவித்த படம் ஜெயிலர். இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்புள்ளது என்று ஏற்கெனவே ஒரு தகவல் இருந்தது. அந்தத் தகவல் உண்மைதான் என தற்போது தெரிய வந்துள்ளது. அப்படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்த மிர்னா இது பற்றிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அவர் ஜெயிலர் படத்தின் இயக்குனர் நெல்சனுடன் பேசியதாகவும், அப்போது நெல்சன் ஜெயிலர் 2 படத்திற்கான கதையை எழுதி வருவதாக சொன்னதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இரண்டாம் பாகத்தில் தன்னுடைய கதாபாத்திரம் இருக்கிறதா இல்லையா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அது இயக்குனரின் முடிவு சார்ந்த ஒரு விஷயம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அப்படம் முடிந்தபின் ரஜினியின் 172வது படமாக ஜெயிலர் 2 படம் உருவாகலாம்.