5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த வருடம் வெளியாகி 600 கோடி வசூலைக் குவித்த படம் ஜெயிலர். இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்புள்ளது என்று ஏற்கெனவே ஒரு தகவல் இருந்தது. அந்தத் தகவல் உண்மைதான் என தற்போது தெரிய வந்துள்ளது. அப்படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்த மிர்னா இது பற்றிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அவர் ஜெயிலர் படத்தின் இயக்குனர் நெல்சனுடன் பேசியதாகவும், அப்போது நெல்சன் ஜெயிலர் 2 படத்திற்கான கதையை எழுதி வருவதாக சொன்னதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இரண்டாம் பாகத்தில் தன்னுடைய கதாபாத்திரம் இருக்கிறதா இல்லையா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அது இயக்குனரின் முடிவு சார்ந்த ஒரு விஷயம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அப்படம் முடிந்தபின் ரஜினியின் 172வது படமாக ஜெயிலர் 2 படம் உருவாகலாம்.