தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

காரைக்குடி : வயதான முதியவர் ஒருவர் ஆசையாய் சால்வை கொடுக்க, அதை தூக்கி எறிந்த நடிகர் சிவகுமாருக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிவகுமார், 82. ஹீரோ, குணச்சித்ரம் என 175க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது சினிமாவை விட்டு ஒதுங்கி உள்ளார். இவரது மகன்களான சூர்யா, கார்த்தி ஆகியோர் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.
படங்களில் நடிக்காவிட்டாலும் அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் மட்டும் சிவகுமார் பங்கேற்று வருகிறார். அப்படி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அவர் நடந்து கொள்ளும் விதம் தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது.

ஏற்கனவே ரசிகர் ஒருவர் தன்னுடன் செல்பி எடுக்க முயன்றபோது போனை தட்டிவிட்டார். இது வைரலாகி அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். பின்னர் தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்த சிவகுமார் அந்த ரசிகருக்கு புதிய செல்போன் வாங்கி தந்தார். அதே போல் இன்னொரு நிகழ்ச்சியில் மற்றொரு ரசிகர் அவருடன் செல்பி எடுக்க முயன்றார், அப்போதும் தட்டிவிட்டார்.

இந்நிலையில் காரைக்குடியில் புத்தக வெளியீட்டு விழா ஒன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட சிவகுமாருக்கு வயதான முதியவர் ஒருவர் ஆசையாய் சால்வை கொண்டு வந்து கொடுத்தார். அதை பிடுங்கி வெறுப்புடன் தூக்கி வீசி எறிந்துவிட்டு சென்றார் சிவகுமார். அந்த இடத்திலேயே அந்த முதியவர் மனம் நொந்து போனார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.
தொடர்ந்து சிவகுமார் பொது நிகழ்வுகளில் இதுபோன்று நடந்து கொள்வது ரசிகர்கள் இடையே கோபத்தை வர வழைத்துள்ளது. அவருக்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.