இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி நடித்து வரும் படம் 'வேட்டையன்'. 'ஜெய் பீம்' படத்தை இயக்கி த.செ.ஞானவேல் இயக்குகிறார். இதில் அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி பகுதிகளில் 3ம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
இதில் கலந்து கொள்ள நேற்று விமானத்தில் ஐதராபாத் சென்றார் ரஜினி. அப்போது விமான நிலையத்தில் ரசிகர்கள் அவரை சூழ்ந்தனர். ரஜினியுடன் புகைப்படம் எடுக்க விரும்பினர். ரஜினியும் அவர்களோடு நின்று போட்டோ எடுத்துக் கொண்டார். சமீபகாலமாக ரஜினியிடம் பல மாற்றங்கள் தெரிகிறது சசிகலா வீட்டுக்கு செல்கிறார், கருணாநிதி நினைவகம் திறப்பு விழாவிற்கு செல்கிறார், விஜயகுமார் பேத்தி திருமணத்திற்கு செல்கிறார். இந்த மாற்றங்கள் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.