அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து |

ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி நடித்து வரும் படம் 'வேட்டையன்'. 'ஜெய் பீம்' படத்தை இயக்கி த.செ.ஞானவேல் இயக்குகிறார். இதில் அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி பகுதிகளில் 3ம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
இதில் கலந்து கொள்ள நேற்று விமானத்தில் ஐதராபாத் சென்றார் ரஜினி. அப்போது விமான நிலையத்தில் ரசிகர்கள் அவரை சூழ்ந்தனர். ரஜினியுடன் புகைப்படம் எடுக்க விரும்பினர். ரஜினியும் அவர்களோடு நின்று போட்டோ எடுத்துக் கொண்டார். சமீபகாலமாக ரஜினியிடம் பல மாற்றங்கள் தெரிகிறது சசிகலா வீட்டுக்கு செல்கிறார், கருணாநிதி நினைவகம் திறப்பு விழாவிற்கு செல்கிறார், விஜயகுமார் பேத்தி திருமணத்திற்கு செல்கிறார். இந்த மாற்றங்கள் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.