தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பருத்தி வீரன் படத்திற்காக தேசிய விருது பெற்றவர் பிரியாமணி. தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு பக்கம் சென்றவர் அங்கு பிசியான நடிகை ஆனார். தற்போது பாலிவுட் படங்கள், வெப் சீரிஸ்களில் கலக்கி வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஜவான், ஆர்டிகள் 370, தெலுங்கில் வெளியான பாமகலாபம் 2 படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது. கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையாக பிரியாமணி மாறி இருக்கிறார்.
இந்த நிலையில் பிரியாமணி 'மெர்சிடைஸ் பென்ஸ் ஜிஎல்சி' என்ற நவீன ரக சொகுசு காரை வாங்கி உள்ளார். இதன் மதிப்பு 75 லட்சம். குடும்பத்தினருடன் ஷோரூமுக்கு சென்று காரை வாங்கிய அவர் தனது மகிழ்ச்சியை அங்கு கேக் வெட்டி கொண்டாடினார். சமீபத்தில் பிரியாமணி ஐதராபாத்தில் வீடு வாங்கியது குறிப்பிடத்தக்கது. பிரியாமணிக்கு பெங்களூரிலும் சொந்த வீடு உள்ளது.