ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாள திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளாக விதவிதமான, வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் குணச்சித்திர நடிகை லேனா. தமிழில் அனேகன், திரவுபதி ஆகிய படங்களில் டாக்டராக நடித்திருந்தார். மலையாளத்தில் தற்போதும் பிசியான குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார் லேனா.
கடந்த 2004-ம் வருடம் அபிலாஷ் குமார் என்கிற கதாசிரியரை திருமணம் செய்த லேனா 2013ல் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். விவகாரத்து உத்தரவு வந்தபோது நீதிமன்ற கேன்டீனில் தாங்கள் இருவரும் ஒரே கிண்ணத்தில் குலோப் ஜாமூனை பகிர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்ததாக கூறும் அளவுக்கு முதல் கணவரிடம் இருந்து நட்பாகவே பிரிந்தார்.
இந்தநிலையில் பத்து வருடங்கள் கழித்து தற்போது பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார் லேனா. இவர் இந்திய விமான படையில் பைலட்டாக பணிபுரிகிறார். ககன்யான் என்று பெயரிடப்பட்ட இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டத்தின் ஒரு பகுதியாக பிரசாந்த் இருந்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதமே தாங்கள் திருமணம் செய்து கொண்டோம் என்று கூறியுள்ள லேனா, இது பெரியவர்களால் ஏற்பாடு செய்யப்பட திருமணம் தான். நேற்று(பிப்-27) கேரளா வந்த பிரதமர் மோடியின் கையால் சிறந்த விமானப்படை வீரருக்கான விருதை பிரசாந்த் பாலகிருஷ்ணன் பெற்ற பின்னர் தான் தங்களது திருமணத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என காத்திருந்ததாகவும் கூறியுள்ளார்.