பிளாஷ்பேக்: ஒரே படத்தின் கதையை இருவேறு காலங்களில் இயக்கிய இயக்குநர் | 'பென்ஸ்' படத்தில் இணையும் ஹரிஷ் கல்யாண், மூன்று நாயகிகள் | ஆண்கள் பார்வையில் வெளியான குடும்ப வன்முறை படம் ; கண் கலங்கிய நடிகர் பாலா | பாலகிருஷ்ணா பிறந்தநாளில் வெளியான ‛அகண்டா 2' அறிமுக டீசர் | தந்தையின் இறுதிச்சடங்கு.. ஸ்ட்ரெச்சரில் வந்த தாய் ; கதறியழுத வில்லன் நடிகர் | வெற்றிமாறனை சுற்றி வரும் வதந்திகள், பதில் சொல்வாரா ? | நயன்தாரா படத்தை தொடர்ந்து திலீப் படத்தை இயக்கும் வாரிசு நடிகர் | செல்வத்தைத் தருவாரா 'குபேரா' ? திரையுலகம் எதிர்பார்ப்பு… | ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் |
பாலிவுட்டின் பிரபல நடிகையான தீபிகா படுகோனே தான் தாய்மை அடைந்திருப்பதாக கணவர் நடிகர் ரன்வீர் சிங்குடன் இணைந்து அறிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் தளத்தில் குழந்தைகளின் ஆடைகளைப் பகிர்ந்து 'செப்டம்பர் 2024' என்று குறிப்பிட்டு தீபிகா, ரன்வீர் எனப் பதிவிட்டுள்ளார். அவரது பதிவை 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அதற்குள் லைக் செய்துள்ளனர். சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
இந்திய அணியின் பாட்மின்டன் வீரரான பிரகாஷ் படுகோனேவின் மகள் தீபிகா படுகோனே. கொங்கணியைத் தாய் மொழியாகக் கொண்ட தீபிகா டென்மார்க்கில் பிறந்து பெங்களூருவில் படித்து வளர்ந்தவர். சோப் விளம்பரப் படத்தில் நடித்து பிரபலமடைந்த தீபிகா பல விளம்பரப் படங்களில் நடித்துள்ளார்.
முதலில் கன்னடப் படத்தில் அறிமுகமாகி பின் 2007ம் ஆண்டு 'ஓம் சாந்தி ஓம்' ஹிந்திப் படத்தில் நடித்து பிரபலமாகி பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். தன்னுடன் நடித்த பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கைக் காதலித்து 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தாய்மை அடைந்துள்ளார்.