தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் |
திருமணத்திற்கு முன்பு போட்டோஷுட், திருமணத்திற்குப் பின்பு போட்டோஷுட் போக தாய்மை அடைந்து குழந்தை பெறுவதற்கு முன்பாக 'பிரக்னன்சி' போட்டோஷுட் நடத்துவதும் தற்போது 'பேஷன்' ஆகிவிட்டது. சினிமா பிரபலங்கள் மட்டுமல்ல மற்றவர்களும் கூட இப்படி புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
பாலிவுட்டின் பிரபலமான நடிகையான தீபிகா படுகோனே, பாலிவுட்டின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங்கைக் காதலித்து 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த வருடம் பிப்ரவரி மாதம் தீபிகாவின் தாய்மை பற்றி இருவருமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அதன்பின் 'கல்கி 2898 ஏடி' பட புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கூட தீபிகா கலந்து கொண்டார். அவரது 'பேபி பம்ப்' புகைப்படத்தை எடுக்க பாலிவுட் புகைப்படக் கலைஞர்கள் பெரிதும் பிரயத்தனப்பட்டார்கள்.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான தீபிகாவின் கர்ப்பகால புகைப்பட போட்டோஷுட் ஒன்றை நடத்தி பல புகைப்படங்களை தீபிகா, ரன்வீர் ஜோடி வெளியிட்டுள்ளது. பல சினிமா பிரபலங்கள் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இந்த மாதக் கடைசியில் தீபிகாவுக்கு குழந்தை பிறக்க உள்ளதாகத் தகவல். இன்ஸ்டாவில் நேற்றிரவு அவர்கள் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் 50 லட்சம் லைக்குகளைக் கடந்துள்ளன.