ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். பிரபல ஊட்டச்சத்து மருத்துவரான இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக மகிழ்மதி இயக்கம் என்ற அமைப்பின் மூலம், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைவருக்கும் தரமான ஊட்டச்சத்து உணவு இலவசமாக கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி அதற்காக சில பணிகளையும் செய்து வருகிறார். கடந்த சட்டசபை தேர்தலின் போது இவர் தி.மு.க.,வில் இணைவார் என பேசப்பட்டது. ஆனால் எந்த கட்சியிலும் சேராமல் இருந்து வந்தார்.
இந்நிலையில், திவ்யா சத்யராஜ்க்கு ஒரு கட்சியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து திவ்யா சத்யராஜ் கூறியதாவது: எனக்கு அரசியல் ஆர்வம் உண்டு. நான் எம்.பி.,யாக ஆசைப்படுகிறேனா எனக்காக என் தந்தை பிரசாரம் செய்வாரா என்றெல்லாம் பலரும் கேள்வி கேட்டனர். நான் பதவிக்காகவோ, தேர்தலில் ஜெயிக்கவோ அரசியலுக்கு வர வேண்டும் என நினைக்கவில்லை. மக்களுக்கு வேலை செய்யவே அரசியலுக்கு வர நினைத்தேன். நான் மகிழ்மதி இயக்கம் ஆரம்பித்து மூன்று ஆண்டுகளாக களப்பணி செய்து வருகிறேன்.
இந்த அமைப்பின் மூலம், தமிழகத்தில் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்கப்படுகிறது. நான் தனிக்கட்சியும் ஆரம்பிக்கப் போவதில்லை. வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட எனக்கு ஒரு கட்சியிலிருந்து அழைப்பு வந்தது. ஆனால் எனக்கு விருப்பம் இல்லை. எந்த கட்சியுடன் இணையப் போகிறேன் என்பதை லோக்சபா தேர்தல் முடிந்தவுடன் அறிவிப்பேன். சத்யராஜின் மகளாகவும், தமிழ் மகளாகவும் தமிழகத்தின் நலன் காக்க உழைப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.