கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

இயக்குனர் தமிழ் இதற்கு முன்பு காவல் துறையில் பணிபுரிந்துள்ளார். ஒரு சில காரணங்களால் காவலர் பணியை விட்டு விலகி பின்னர் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். இதையடுத்து அவர் அசுரன், ஜெய் பீம் படங்களில் நடித்துள்ளார். கடந்த வருடத்தில் இவரது இயக்கத்தில் நேரடியாக ஓடிடியில் வெளிவந்து நல்ல விமர்சனங்களை பெற்ற திரைப்படம் 'டாணாக்காரன்'.
தற்போது இவரது அடுத்த படத்தை குறித்து தகவல் வெளியாகியுள்ளது அதன்படி, கடந்த சில மாதங்களாக தமிழ் தான் இயக்கும் புதிய படத்திற்காக நடிகர் கார்த்தி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளார். இதனை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. கூடுதலாக, இந்த படம் ராமேஸ்வரத்தில் 60 காலகட்டத்தில் நடக்கும் கேங்க்ஸ்டர் படம் என கூறப்படுகிறது.