இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நகுல் நடிப்பில் ‛வாஸ்கோடகாமா' என்ற படம் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது. அடுத்து அவர் நடிக்கும் புதிய படம் 'தி டார்க் ஹெவன்'. ரேணு சவுந்தர் நாயகியாக நடிக்கிறார். இவர்கள் தவிர சரண், கேசவன், ஜான் அலெக்ஸ், மனோஜ், ஆண்டனி பிரகன், டேனி தயால் உள்பட பலர் நடிக்கிறார்கள். மணிகண்டன் பி.கே.ஒளிப்பதிவு செய்கிறார். சக்தி பாலாஜி இசையமைக்கிறார். பாலாஜி இயக்குகிறார்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது : ஒரு கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை மர்மமான முறையில் கொலை நடக்கிறது. கொலைகளுக்கிடையே உள்ள தொடர்ச்சியை யாரும் எண்ணிப் பார்க்கவில்லை. ஊரில் யாராவது அது பற்றிப் பேசும் போது மற்றவர்கள் அதை ஒரு கதை போல எண்ணி நம்பாமல் கடந்து போகிறார்கள்.
அப்படி ஒரு கொலை நடக்கும் போது அங்கே இளம்பாரி என்கிற இன்ஸ்பெக்டர் பணிக்கு வருகிறார். அவர் கொலைக்கான பின்னணியை ஆராய்கிறார். இதில் பல மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன. புலனாய்வு செய்யும் இன்ஸ்பெக்டராக நகுல் நடிக்கிறார். படம் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என்று பல மொழிகளில் உருவாகிறது என்றார்.