இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மலையாளத் திரையுலகின் மற்றுமொரு 'சென்சேஷனல்' படமாக 'மஞ்சம்மேல் பாய்ஸ்' படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. கேரளாவை தாண்டி அந்தப் படம் தமிழகம் உள்ளிட்ட இதர தென்னிந்திய மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ரசிகர்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி வெளியான இப்படம் தமிழகத்தில் கடந்த வாரத்திலிருந்துதான் பரபரப்பை ஏற்படுத்தி அரங்கு நிறைந்த காட்சிகளாக பெரும்பாலான தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது இந்தப் படம் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளது. படம் வெளியான 12 நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.
மலையாளத் திரையுலகில் இதற்கு முன்பு “புலி முருகன், லூசிபர், 2018” ஆகிய படங்கள் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளன. நான்காவது படமாக 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படம் அந்த சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளது.
தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.10 கோடி வசூலைக் கடந்துள்ளது. இங்கு ஒரு மலையாளத் திரைப்படம் ரூ.10 கோடி வசூலைக் கடப்பது இதுவே முதல் முறை. தற்போது ஒரு நாளைக்கு 1200 காட்சிகள் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என தயாரிப்பு நிறுவனமே அறிவித்துள்ளது..