இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கடந்த சில வருடங்களாகவே திரையுலகில் ஓடிடி தளங்களில் பங்களிப்பு தவிர்க்க முடியாததாகிவிட்டது. திரைப்படம் வெளியான சில வாரங்களில் இந்த ஓடிடி தளங்களில் படங்கள் வெளியாகி வருவதால் தியேட்டரில் பார்க்க முடியாத ரசிகர்கள் அனைவருக்கும் இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுக்கிறதோ இல்லையோ அவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடு கட்ட ஓடிடி தளங்கள் ஓரளவுக்கு உதவுகின்றன.
அதேசமயம் இதனால் திரையரங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் அவ்வப்போது போர்க் குரல்கள் எழுகின்றன. இன்னொரு பக்கம் பிரபலமான படங்களை மட்டுமே இந்த ஓடிடி தளங்கள் வாங்குவதாகவும், சிறிய பட்ஜெட் படங்களை கண்டு கொள்வதில்லை என்பதும் சமீபகால குற்றச்சாட்டாக இருக்கிறது. அதனால் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை எடுத்துவிட்டு அதை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாமல் பல தயாரிப்பாளர்கள் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மலையாள தயாரிப்பாளர்களுக்கு கை கொடுக்கும் விதமாக இந்தியாவிலேயே முதன் முறையாக அரசாங்கம் மூலம் நடத்தப்படும் 'சி ஸ்பேஸ்' என்கிற ஓடிடி தளத்தை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்துள்ளார். கேரள மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் கீழ் இந்த 'சி ஸ்பேஸ்' ஓடிடி தளம் செயல்பட இருக்கிறது. கலாச்சாரத்தை மேம்படுத்தக்கூடிய, நல்ல கதைய அம்சம் கொண்ட சிறிய பட்ஜெட் படங்களை இந்த ஓடிடி தளத்தின் மூலம் வெளியிட புதிய வாய்ப்பு உருவாகி உள்ளது.