ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தெலுங்கு திரையுலகில் நடிகர் சாய் தரம் தேஜ் கவனிக்கத்தக்க இளம் நடிகராக வலம் வருகிறார். நடிகர் சிரஞ்சீவியின் குடும்பத்து வாரிசு நடிகர்களில் ஒருவராக சினிமாவில் அறிமுகமான இவர் சிரஞ்சீவியின் சகோதரி விஜய துர்காவின் மகன் ஆவார். தற்போது கஞ்சா சங்கர் என்கிற படத்தில் நடித்து வருகிறார். மகளிர் தினத்தை முன்னிட்டு ஆண்கள் பலரும் தங்களது தாய், மனைவி, சகோதரி, மகள் ஆகியோருக்கு ஏதோ ஒரு விதத்தில் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் வெளிப்படுத்தி வந்த நிலையில், சாய் தரம் தேஜ் தன் தாய்க்கு பெருமை சேர்க்கும் விதமாக தன்னுடைய பெயரையே தற்போது மாற்றிக் கொண்டுள்ளார்.
ஆம்... சாய் தரம் தேஜ் என்கிற தன்னுடைய பெயரை சாய் துர்கா தேஜ் என தன் அம்மாவின் பெயரும் சேர்ந்து வருமாறு மாற்றிக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “தேஜ் என்கிற பெயர் வரும்போது எனது தந்தை குடும்பத்தின் பெயர் ஞாபகத்திற்கு வரும். அதேபோல எனது தாயின் பெயரும் என்னுடன் இணைந்து இருக்க வேண்டும் என விரும்பினேன். அதற்காகவே இப்படி பெயரை மாற்றிக் கொண்டுள்ளேன்” என கூறியுள்ளார்.