ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ஏஆர் முருகதாஸ். சில ஹீரோக்களுக்கு திருப்புமுனையான படங்களைக் கொடுத்தவர். கடந்த சில வருடங்களாக தமிழில் படங்களை இயக்காமல் இருந்தார். அவர் திருப்புமுனை தந்த ஹீரோக்களை அவரை ஒதுக்கினார்கள். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ஏஆர் முருகதாஸ்.
அதோடு சல்மான் கான் நடிக்க உள்ள ஹிந்திப் படத்தை இயக்கப் போவதாக ஒரு தகவல் வெளியானது. இன்று அந்தத் தகவலை உறுதி செய்துள்ளார் ஏஆர் முருகதாஸ்.
“சல்மான்கான், தயாரிப்பாளர் சஜித் நடியத்வாலா ஆகியோருடன் இணைவதில் மிகவும் உற்சாகம். அசாத்திய திறமைசாலிகளுடன் இணைவது ஒரு பாக்கியம். மறக்க முடியாத சினிமா அனுபவத்திற்குத் தயாராகுங்கள். எங்களது படம் 2025ம் ஆண்டு 'ஈத்'துக்கு வர உள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமீர்கான் நடித்த 'கஜினி' ஹிந்திப் படம் மூலம் 100 கோடி கிளப்பை ஆரம்பித்து வைத்தவர் ஏஆர் முருகதாஸ். அதன் பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'அகிரா' ஹிந்திப் படத்தை இயக்கினார். ஆனால், அப்படம் தோல்வியைத் தழுவியது. தற்போது ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பாலிவுட் பக்கம் போகிறார்.