ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தற்போது கமல்ஹாசன் நடிப்பில் தக்லைப் என்ற படத்தை இயக்கி வருகிறார் மணிரத்னம். இப்படத்தில் கலெக்டர் வேடத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்த துல்கர் சல்மான் கால்ஷீட் பிரச்னை காரணமாக வெளியேறி விட்டார். இதனால் அவர் நடிக்க இருந்த வேடத்தில் தெலுங்கு நடிகர் நானி நடிப்பார் என்று செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது சிம்புவிடத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய ‛செக்கச் சிவந்த வானம்' என்ற படத்தில் நடித்துள்ள சிம்பு, இந்த ‛தக்லைப்' படத்தில் இணைந்தால் முதல் முறையாக கமல்ஹாசன் உடன் அவர் இணையும் படம் இதுவாக இருக்கும். மேலும் சிம்பு நடிக்கும் 48வது படத்தையும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.