தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடிப்பில் சங்கராந்தியை முன்னிட்டு வெளியான தெலுங்குப் படம் 'ஹனுமான்'. பான் இந்தியா படமாக வெளிவந்த இந்தப் படம் அதே சமயம் வெளியான மகேஷ்பாவின் 'குண்டூர் காரம்' படத்தை விடவும் பெரும் வசூலைக் குவித்தது. 50 நாட்களைக் கடந்து ஓடி வரும் இப்படம் 300 கோடி வசூலைக் கடந்துள்ளது.
ஐதராபாத்திற்கு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை 'ஹனுமான்' படத்தின் தயாரிப்பாளர் நிரஞ்சன் ரெட்டி, இயக்குனர் பிரசாந்த் வர்மா, படத்தின் நாயகன் தேஜா சஜ்ஜா ஆகியோர் சந்தித்தனர். அமித்ஷாவுக்கு ஹனுமான் சிலை ஒன்றையும் பரிசாக அளித்தனர்.
படக்குழுவினர் தன்னை சந்தித்ததுபற்றி எக்ஸ் தளத்தில் அமைச்சர் அமித்ஷா வாழ்த்தியுள்ளார். “சமீபத்தில் வெளியான சூப்பர்ஹிட் படமான 'ஹனுமான்' படத்தின் இயக்குனர் பிரசாந்த் வர்மா, திறமையான நடிகர் தேஜா சஜ்ஜா ஆகியோரை சந்தித்தேன்.
“பாரதத்தின் ஆன்மிக மரபுகளையும், அவற்றிலிருந்து தோன்றிய சூப்பர் ஹீரோக்களை வெளிப்படுத்தும் பணியையும் படக்குழுவினர் செய்துள்ளனர். குழுவின் எதிர்கால திட்டங்களுக்கும் எனது வாழ்த்துகள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
“அமித்ஷா சாரை சந்தித்தது ஒரு முழுமையான மரியாதை. உங்களது அன்பான, கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி சார்,” என படத்தின் நாயகன் தேஜா சஜ்ஜாவும், “உங்களைச் சந்தித்தது பாக்கியம் சார். உங்களின் அன்பான வார்த்தைகளும், ஊக்கமும் எங்களிடம் நீண்ட தாக்கத்தை ஏற்படுத்தும்,” என படத்தின் இயக்குனர் பிரசாந்த் வர்மாவும் நன்றி தெரிவித்துள்ளனர்.