இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தென்னிந்திய சினிமா மற்றும் சீரியல் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் சென்னையில் நடைபெற்றது. இதில் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் 1017 உறுப்பினர்கள் வாக்களித்தார்கள். தலைவர் பதவிக்கு நடிகர் ராதாரவி மற்றும் ராஜேந்திரன், சற்குணம் உள்ளிட்டோர் போட்டியிட்டார்கள். தேர்தலுக்கு பிறகு உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், நடிகர் ராதாரவி 662 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜேந்திரன் 349 வாக்குகளும், சற்குணம் 36 வாக்குகளும் பெற்றுள்ளார்கள். இதன் மூலம் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் ராதாரவி தலைவராகி இருக்கிறார். மேலும் நடிகர் ராதாரவி மீது பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த போதும், அதை எல்லாம் மீறி அவர் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.