பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‛கோட்' படத்தின் படப்பிடிப்பு தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று விஜய் கேரளாவிற்கு புறப்பட்டு சென்றார். அப்போது விமான நிலையத்தில் அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டார்கள். அதன் பிறகு படப்பிடிப்பு நடைபெற்ற மைதானத்தை நோக்கி விஜய் புறப்பட்டு சென்றபோது வழி நெடுகிலும் ரசிகர்கள் ‛தலைவா தலைவா' என்றபடி அவரை பின்தொடர்ந்து வந்திருக்கிறார்கள்.
படப்பிடிப்பு நடைபெறும் இடத்தை அடைந்த விஜய், காரில் இருந்து இறங்கியபோது பெரிய அளவில் ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இந்த தள்ளுமுள்ளு காரணமாக விஜய்யின் கார் கண்ணாடி உடைந்து இருக்கிறது. ஒரு வழியாக விஜய்யின் பாதுகாப்பு படையினர் அவரை அங்கிருந்து மீட்டு சென்றுள்ளார்கள். இப்படி ரசிகர்கள் தனது கார் கண்ணாடியை உடைத்த போதும் அது குறித்து எந்த கோபத்தையும் வெளிப்படுத்தாத விஜய், ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு தான் இதற்கு காரணம். அவர்களின் அன்புக்கு நான் தலை வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.