ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் உள்ளடக்கிய உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் பெண்களை அதிக அளவில் பங்கு பெற வைக்க வேண்டும் என்பது குறித்த கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, ‛‛பெண்களிடம் பெரிய அளவில் சக்தி உள்ளது. ஐந்து ஆண்கள் செய்யக்கூடிய வேலையை ஒரு பெண்ணால் செய்ய முடியும். குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் முதலில் நிலவில் கால் வைத்தாலும் அவரை அங்கு கொண்டு சேர்த்தது ஒரு பெண்தான். அக்னி மிஸைல் முதல் இஸ்ரோ வரை பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது.
குறிப்பாக என்னை சுற்றி இருக்கும் பெண்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். பெண்களால் முடியாதது எதுவுமில்லை. என்றாலும் பெண்கள் அங்கீகாரம் பெறுவதற்கு ஆண்களைவிட 50 சதவீதம் அதிகமாக உழைக்க வேண்டி உள்ளது. பெண்களை இன்னும் மேலே கொண்டு வருவதற்கு நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்'' என்று பேசி இருக்கிறார் சூர்யா.