தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு மீண்டும் நடிப்பில் பிஸியாகிவிட்டார் த்ரிஷா. அந்த வகையில் இந்த வருடம் தெலுங்கிலும் சிரஞ்சீவியுடன் இணைந்து விஷ்வம்பரா என்கிற படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். வசிஷ்டா என்பவர் இயக்கும் இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது புகழ் மரகதமணி இசையமைக்கிறார்.
சமீபத்தில் ஐதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சென்றிருந்த த்ரிஷா, ஒருநாள் காலைப்பொழுதில் நாயகன் சிரஞ்சீவி மற்றும் இசையமைப்பாளர் மரகதமணி இருவருடனும் இணைந்து எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறும்போது, “உண்மையிலேயே ஜாம்பவான்களுடன் ஒரு தெய்வீக காலைப்பொழுது” என்று கூறியுள்ளார்.