ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ் சினிமாவில் சில சமயங்களில் சில அபூர்வமான விஷயங்கள் நடைபெறும். அப்படியான ஒரு அபூர்வமான விஷயம் நாளை மார்ச் 29 வெளியீட்டில் இருக்கிறது. நாளை 8 நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 'இடி மின்னல் காதல், வெப்பம் குளிர் மழை, கா' என இயற்கையுடன் சம்பந்தப்பட்ட மூன்று படங்கள் வெளியாக உள்ளன.
இயற்கையின் சக்தியாக வெளிப்படும் 'இடி, மின்னல், வெப்பம், குளிர், மழை' ஆகியவற்றை படத் தலைப்பாகக் கொண்ட இரண்டு படங்கள் வெளிவர உள்ளன. அதோடு 'கா' படத்தின் பெயரையும் கூட சேர்த்துக் கொள்ளலாம். ஏனென்றால் அவற்றிற்கு ஆதாரமாக இருப்பது 'கா' எனவும் அழைக்கப்படும் காடு. இப்படி ஒரே நாளில் இயற்கையுடன் சம்பந்தப்பட்ட தலைப்புகளைக் மூன்று படங்கள் வருவது அபூர்வமான விஷயம். இதற்கு முன்பு இப்படி ஒரு பொருத்தத்துடன் படங்கள் வந்ததில்லை.
ஒரு பக்கம் முன்னணி ஹீரோக்கள் கூட ஆங்கிலப் பெயர்களைத் தேடிப் போகும் இந்த சூழ்நிலையில் தமிழ்ப் பெயர்களுடன் படங்கள் வருவதை அபூர்வமாகப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் நாளை வெளியாக உள்ள சில படங்களின் பெயர்கள் இயற்கையுடனும், தமிழுடனும் பொருத்தமாக வருகிறது. அதற்காகவாவது அந்தப் படங்களின் இயக்குனர்களைப் பாராட்டியே ஆக வேண்டும்.